Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து-  ரூ.1,000 கோடி இழப்பு

ஜனவரி 23, 2021 06:44

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தயாரிக்கும் இந்திய சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை நேற்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் பார்வையிட்டார். அப்போது உடன் இருந்த சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா நிருபர்களிடம் கூறியதாவது:

தீ விபத்து காரணமாக கொரோனா தடுப்பு மருந்துக்கு பாதிப்பு இல்லை. சம்பவம் நடந்த கட்டிடத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி ஒரு கி.மீ. தொலைவில் நடந்து வருகிறது.

ஆனால் விபத்து நடந்த கட்டிடத்தில் காசநோய் தடுப்பு மருந்து மற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு பணி நடந்து வந்தது. அந்த தடுப்பு மருந்துகள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து காரணமாக எங்களுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்